வெள்ளி, 17 அக்டோபர், 2014

தசவதாரமும் நவக்கிரஹமும்


தசவதாரமும் நவக்கிரஹமும்


அவதாரம் - அதிபதி
1) ஸ்ரீமத்ஸ்ய அவதாரம் - கேது
2) ஸ்ரீகூர்ம அவதாரம் - சனி
3) ஸ்ரீவராஹ அவதாரம் - ராகு
4) ஸ்ரீநாரசிம்ம அவதாரம் - செவ்வாய்
5) ஸ்ரீவாமன அவதாரம் - குரு
6) ஸ்ரீபரசுராம அவதாரம் - சுக்கிரன்
7) ஸ்ரீராம அவதாரம் - சூரியன்
8) ஸ்ரீபலராம அவதாரம் - குளிகன்
9) ஸ்ரீகிருஷ்ண அவதாரம் - சந்திரன்
10 ஸ்ரீகல்கி அவதாரம் - புதன்
கிரகங்களின் தெசா புக்தி காலங்களில் அந்த அந்த தசவதார தெய்வத்தை வணங்க நற்பலன் ஏற்படும்.

உயிரினங்களின் பரினாம வளர்ச்சியை பகவானின் தசவதாரத்தில் காணலாம். 
( உயிரினங்களின் பரினாம வளர்ச்சியை கண்டறிந்தவர்கள் நம் இந்தியர்கள்)
1) ஸ்ரீமத்ஸ்ய அவதாரம் - மீன்
( உயிரினங்கள் நீரிலிருந்து தொன்றின) 4வது அறிவு - நீர் வாழ்வன -முட்டை இட்டு குஞ்சு பொறிப்பன.

2) ஸ்ரீகூர்ம அவதாரம் - ஆமை - 4 வது அறிவு - நீர்+நிலத்தில் வாழ்வன -முட்டை இட்டு குஞ்சு பொறிப்பன.

3) ஸ்ரீவராஹ அவதாரம் - பன்றி - மிருகம்- 5 வது அறிவு - நிலதில் வாழ்வன - குட்டிபொட்டு பாலூட்டுபவை.

4) ஸ்ரீநாரசிம்ம அவதாரம் - பாதி மனிதன் பாதி மிருகம் - 5 வது அறிவு - நிலதில் வாழ்வன - குட்டிபொட்டு பாலூட்டுபவை.

5) ஸ்ரீவாமன அவதாரம் - பாதி வளர்ச்சி அடைந்த மனிதன். 6 வது அறிவு (பாதி) - மனிதன்.

6) ஸ்ரீபரசுராம அவதாரம் - மனிதன் - 6 வது அறிவு (முக்கால்) - காட்டில் மிருகங்களுக்கு இடையில் வேட்டையாடி வாழ்ந்த காட்டு மனிதன்.

7) ஸ்ரீராம அவதாரம் - முழுமையான ஒழுக்கமான மனிதன். 6 வது அறிவு (முழுமை) நகரத்தில் வாழும் மனிதன்.

8) ஸ்ரீபலராம அவதாரம் - முழுமையான மனிதன் -6 வது அறிவு (முழுமை) - தனக்கு தேவையான உணவை தானே விளைவிக்க தெரிந்தவன்.

9) ஸ்ரீகிருஷ்ண அவதாரம் - முழுமையான மனிதன் -7 வது அறிவு (முழுமை) - அன்பும், பாசமும் உருவாக்கி, தீயதை அழித்து நல்லதை நிலை நாட்டும் பொது நலம் உள்ள மனித தெய்வம்.

10 ஸ்ரீகல்கி அவதாரம் - 8 வது அறிவு, தேவர்கள் - தீயதை அழித்து நல்லதை நிலை நாட்டும் தேவர்கள். பஞ்சகார்த்தாக்கள்.


இதில் நாம் கடந்து வந்த பரிநாம வளர்ச்சியே பகவானின் தசவதரம். ஒம் நமோ நாராயணாய.

வாழ்க ! வளர்க பல்லாண்டு !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக