புதன், 29 ஏப்ரல், 2015

மன்மத வருட நட்சத்திர கந்தாய பலன்

மன்மத வருட நட்சத்திர கந்தாய பலன்
(நட்சத்திர கந்தாய பலன் கண்டறியும் முறை.)

பஞ்சாங்கத்தில் போடும் நட்சத்திர கந்தாயம் கணிப்பது எப்படி என பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை (சந்திரமான சைத்ர மாதம்) நிகழும் நாளின் சைத்ர சுத்தபிரதமை தினத்தின் 1) திதி, 2) நாள், 3) நட்சத்திரம், 4) யோகம், 5) கரணம் என்று சொல்லும் பஞ்ச அங்கம் 5யையும் குறித்துக் கொள்ளவும்.
1) அன்றைய திதி பிரதமை முதலான திதியின் எண் = அ
(இது எப்போதும் பிரதமை தான் ஆக மதிப்பு = 1)
2) அன்றைய நாள், ஞாயிறு முதலாக கிழமையின் எண் = ஆ
3) அன்றைய நட்சத்திரம், அசுவணி முதலாக நட்சத்திர எண் = இ
4) அன்றைய யோகம், விஷ்கம்பம் முதலாக யோக எண் = ஈ
5) அன்றைய கரணம், பவம் முதலாக கரண எண் = உ
6) கந்தாய துருவம் = (அ+ஆ+இ+ஈ+உ) = ஊ
6) நட்சத்திர கந்தாயம் கண்டறிய வேண்டிய நட்சத்திர எண் அசுவணி முதலாக எண்ணி = எ
முதற்கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 8) ஆல் வகுக்க வரும் மீதம் (மீதம் இல்லாவிட்டால் பூஜியம் என கொள்க)
நடுகந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 7) / 3) ஆல் வகுக்க வரும் மீதம் (மீதம் இல்லாவிட்டால் பூஜியம் என கொள்க)
கடை கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 5) ஆல் வகுக்க வரும் மீதம் (மீதம் இல்லாவிட்டால் பூஜியம் என கொள்க)
உதாரணம் : மன்மத வருடத்துக்கு பரணி நட்சதிரத்திற்கு கந்தாயம் கண்டறிவோம்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை (சந்திரமான சைத்ர மாதம்) நிகழும் நாள்.
மன்மத வருடத்தின் முந்தைய வருடமான ஜய வருடத்தின் பங்குனி மாதத்தின் வளர்பிறை பிரதமை பங்குனி 07 (21-3-2015) சனிக்கிழமை, உத்திரட்டாதி நட்சத்திரம், பிராம்யம் யோகம், பவம் கரணம் அன்றைய பஞ்ச அங்கங்கள் ஆகும்.
1) அன்றைய திதி பிரதமை முதலான திதியின் எண் = அ = பிரதமை = 1
(இது எப்போதும் பிரதமை தான் ஆக மதிப்பு = 1)
2) அன்றைய நாள், ஞாயிறு முதலாக கிழமையின் எண் = ஆ = சனி = 7
3) அன்றைய நட்சத்திரம், அசுவணி முதலாக நட்சத்திர எண் = இ = உத்திரட்டாதி = 26
4) அன்றைய யோகம், விஷ்கம்பம் முதலாக யோக எண் = ஈ = பிராம்யம் = 25
5) அன்றைய கரணம், பவம் முதலாக கரண எண் = உ = பவம் = 1
6) கந்தாய துருவம் = (அ+ஆ+இ+ஈ+உ) = ஊ = 1+7+26+25+1 = 60 ஆகும்
ஊ = 67
பரணி நட்சதிரத்திற்கு முதற்கந்தாயம் கண்டறிவோம்.
6) நட்சத்திர கந்தாயம் கண்டறிய வேண்டிய நட்சத்திர எண் அசுவணி முதலாக எண்ணி = எ = பரணி = 2
முதற்கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 8) = ((60+2)x3) / 8 = 186 / 8 இன் மீதம் = 2 ஆகும்.
பரணி நட்சதிரத்திற்கு நடுகந்தாயம் கண்டறிவோம்.
நடுகந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 7) / 3) = ((60+2)x7) / 3) = 434 / 3 இன் மீதம் = 2 ஆகும்.
பரணி நட்சதிரத்திற்கு கடை கந்தாயம் கண்டறிவோம்.
கடை கந்தாயம் கண்டறிய = (((ஊ+எ) x 3) / 5) = ((60+2)x3) / 5) = 186 / 5 இன் மீதம் = 1 ஆகும்.
இவ்வாறு மற்ற நட்சத்திரத்திற்கும் கண்டறியவும்.
பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன்
AstroMarichetty

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

உங்கள் ராசியும் உங்கள் மூளையின் செயல் திறனும் (கருது கோள் பொது பலன்)



உங்கள் ராசியும் உங்கள் மூளையின் செயல் திறனும்
(கருது கோள் பொது பலன்)



1) மேசம் (லக்கின) ராசிகாரர்களின்மூளையின் செயல் திறன் : 
கட்டளை, கணிதம், வாய்ப்பாடு, லாஜிக் மற்றும் தொழில் விசயங்களை பதிவு செய்யும் மூளை.

2) ரிசபம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
வர்ணஜாலத்தோடு கண்களால் பார்த்ததை, ரசித்தை, ருசித்த உணவின் சுவை தாய்மொழி அறிவு ஆகியவற்றை அப்படியே பதிவு செய்யும் மூளை.

3) மிதுனம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
முப்பரிமானமாக பார்க்கும் விஷயங்கள், ரசிக்கும் விஷங்களை, நுகரும் வாசனை அப்படியே பதிவு செய்யும் மூளை. ஒரே நேரத்தில் இருவேளைகள் செய்யும் மூளை.

4) கடகம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
அன்றாடம் பார்க்கும் ஒவியம், வரைபடம், தாங்கள் கற்பனை செய்யும் விசயம், உணர்வு பூர்வமாக அறியும் விசயங்களை பதிவு செய்யும் மூளை.

5) சிம்மம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
தான் பார்த்த, கேட்ட, படித்த விசயங்களை தனது அறிவால் ஆராய்ந்து அதைவிட ஒருபடி மேலே போய் பதிவு செய்யும் மூளை.

6) கன்னி (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
பல்வேறு சப்தங்கள் இசை, பாடல் மற்றும் கேட்க்கும் விசயங்கள் மற்றும் ரகசியங்களை அப்படியே பதிவு செய்யும் மூளை.

7) துலாம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
தனது காதால் பலமுறை கேட்டதை, திரும்ப திரும்ப சொல்லிபார்த்ததை, மற்றவர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே பதிவு செய்யும் மூளை.

8) விருச்சகம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
தனது ஐம்புலங்களால் உணர்ந்த உணர்வுப்பூர்வமான விசயங்கள் எழுதி பார்த்த, செய்து பார்த்த, சொல்லிப்பார்த்த, விஷயங்களை அப்படியே பதிவு செய்யும் மூளை.

9) தனுசு (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
பலமொழி அறிவு, தான் படித்ததை, கேட்டதை. அறிந்ததை ஆய்வுக்கண்ணோடு கற்பனை செய்து அப்படியே பதிவு செய்யும் மூளை.
10) மகரம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
பலமுறை எழுதி பார்த்த, செய்து பார்த்த, சொல்லிப்பார்த்த, நினைவு படுத்தி பார்த்த விஷயங்களை அப்படியே பதிவு செய்யும் மூளை.
11) கும்பம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
ராகத்தோடு லயமாக படிக்கும், கேட்கும் விஷயங்கள், மனமகிழ்ச்சியுடன் பார்த்த, கேட்ட, நுகர்ந்த, சொன்ன, தொட்டுணர்ந்த விஷயங்களை அப்படியே பதிவு செய்யும் மூளை.
12) மீனம் (லக்கின) ராசிகாரர்களின் மூளையின் செயல் திறன் :
தான் கனவில் கண்ட விஷயம் கற்பனை மற்றும் பலமுறை பார்த்த கண்ணில் பட்ட சார்ட், பார்முலா, புத்தக பக்கங்கள் ஆகியாவை போட்டோ போல பதிவாகும்.

உயிர்கொண்டு இயங்கும் தாவரங்கள் சிறந்தவை !
அதனினும் உணர்வு கொண்டு இயங்கும் மிருகங்கள் சிறந்தவை !!
அதனினும் அறிவு கொண்டு இயங்கும் மனிதன் சிறந்தவன் !!!
அதனினும் தன் அறிவைக் கொண்டு தன் முன் நிற்பவரின் அறிவை அறிந்து அவருக்கு நல்வழி காட்டும் ஜோதிடன் சிறந்தவன் !!!!

அவ்வாறு மிருகத்திலிருந்து அறிவின்மூலம் வேறுபடும் மனிதர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அறிவை கொடுத்து ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விஷயத்தில் சிறந்தவனாக இறைவன் படைத்துள்ளான். தனக்குள்ள அறிவின் மகத்துவத்தை அறிந்தால் ஞானம் கருதினும் கை கூடும்.
உங்களுக்குள் இருக்கும் வெற்றியாளனை உங்கள் லக்கினத்திலிருந்து அறிந்து அதன்படி முயன்றால்
நீங்கள் தான் விஞ்ஞானி / ஆய்வாளர் / பகுத்தறிவாளர் / ஓவியர் / எழுத்தாளர் / டாக்டர் / மெய்ஞானி / இசையமைப்பாளர் / பாடகர் எல்லாம்
அனைத்தும் உங்கள் வசம் .
பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன்
AstroMarichetty

திங்கள், 13 ஏப்ரல், 2015

மன்மத வருட புத்தாண்டு பலன் ஆதாயம் விரையம். (ராசி பலன்)

மன்மத வருட புத்தாண்டு பலன்
ஆதாயம் விரையம்.
(ராசி பலன்)
முகனூல் நண்பர்கள் அனைவருக்கும் 
மன்மத வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!


பஞ்சாங்கத்தில் போடும் இராசிகளின் ஆதாயம் விரையம் கணிப்பது எப்படி என பார்ப்போம்.
1)ஆதாயம் விரையம் கண்டரிய வேண்டிய ராசிகளின் அதிபதிக்கு கதிர் தெரிய வேண்டும்.
2) அடுத்து அந்த ஆண்டின் இராஜா யார் என்பது தெரிய வேண்டும்.
3) அந்த ஆண்டின் இராஜா எப்படி கண்டு பிடிப்பது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திற்கு முன் வரும் பங்குனி மாதத்தின் அமாவாசையை அடுத்த பிரதமை (சந்திரமான சைத்ர மாதம்) நிகழும் நாளின் அதிபதி அந்த ஆண்டின் இராஜா கிரகம் ஆகும். இது தெலுங்கு வருட பிறப்பு நாள் ஆகும்.
4) கிரக கதிர் செவ்வாய் =8, சுக்கிரன் = 21, புதன் = 17, சந்திரன் = 2, சூரியன் = 6, குரு = 19, சனி = 10 ஆகும்.
5) (((ஆதாயம் அறிய வேண்டிய ராசி அதிபதி கதிர் + அந்த ஆண்டு இராஜா கிரக கதிர்) X 3) + 5) / 15 இன் மீதம் ஆதாயம் ஆகும். மீதம் 0 வந்தால் 15 எனக் கொள்க.
6) மேற்கண்ட விடையின் ஈவை 3 ஆல் பெருக்கி அத்துடன் 5 யை கூட்டி வருவதை 15 ஆல் வகுக்க வரும் மீதன் விரயம் ஆகும். மீதம் 0 வந்தால் 15 எனக் கொள்க.
உதாரணம் மன்மத வருடத்துக்கு மேச, விருச்சக ராசியின் ஆதயம் விரயம் கண்போம்.
மன்மத வருடத்தின் இராஜா கண்டரிய மன்மத வருடத்தின் முந்தைய வருடமான ஜய வருடத்தின் பங்குனி மாதத்தின் வளர்பிறை பிரதமை பங்குனி 07 (21-3-2015) சனிக்கிழமை ஆகும். ஆகவே மன்மத வருடத்தின் இராஜா = சனிபகவான் ஆவர்
.
ஆதயம் மேசம், விருச்சகம்
(((8+10)x3)+5)/15 = 59/15 இதன் மீதம் 14 ஆகவே ஆதாயம் 14 ஆகும்
ஈவு 3 இதை ((3X3)+5) / 15 இன் மீதி 14 ஆகும் ஆகவே விரையம் 14 ஆகும்.
ஆக மேசம், விருட்ச்சக ராசிகளின் ஆதாயம் 14 விரையம் 14 ஆகும்.
இதே போல் மற்ற ராசிக்கும் கண்டறியவும்.
பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன்
AstroMarichetty

இனிய தமிழ் (மன்மத) புத்தாண்டு சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய தமிழ் (மன்மத) புத்தாண்டு 
சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்
வெற்றி+மகிழ்ச்சி நமதே !! 
வாழ்க வளமுடன்
AstroMarichetty