வெள்ளி, 30 ஜனவரி, 2015

பிறந்த கிழமையும் பலனும்

ஜோதிடம் கற்கலாம் வாங்க !
(பிறந்த கிழமையும் பலனும்- பொது பலன் கருதுகோள்)
பகுதி - 1



ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் : 
தனவான், அலட்சிய பார்வை உள்ளவன், தீட்டிய திட்டத்தை முடித்தபின் தான் உறங்குவார்கள், சுற்றத்தினரை ஆதரிப்பவர்கள், வழி நடத்துபவன். யதார்தவாதி, அதிக நண்பர்களை வைத்துக்கொள்ள மாட்டார்கள், கொடுத்த வாக்கை உயிர்போல காப்பவர்கள்.

திங்கட்கிழமை பிறந்தவர்கள் :
கீர்த்திமான், தர்மவான், அபிமானி, அன்பனவன், வழி நடத்துதல் வழி நடப்பது இரண்டும். இனிய சொற்களால் யாரையும் மயக்கிவிடுப்வர்கள், சுற்றமும் நட்பும் நிரம்ப பெற்றவர்கள், பணிவுடையவர்கள். இளகிய மனம் உடையவர்கள், அடிக்கடி தனது கொள்கைகளையும் தொழிலையும் மாற்றுபவர்கள்.

செவ்வாய்கிழமை பிறந்தவர்கள் :
வஞ்சகன், பொய்யன், முரடன், வழி நடப்பவன். பிறர்க்கு உதவுபவன். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள், கடுகடுப்பானவர், தனது கருத்தை அடிக்கடி மாற்றிக்கொள்பவர்கள், பிறர் குற்றத்தை எடுத்து சொல்லி மற்றவரிடம் கெட்ட பெயர் பெறுபவர். சிறந்த தொழில் வல்லுனர்.

புதன்கிழமை பிறந்தவர்கள் :
கல்வியறிவாளன், தெய்வபக்தி உள்ளவன், பிறறை மகிழ்விப்பவன், விவேகி, வழி நடத்துதல் வழி நடப்பது இரண்டும். நயமாகவும் விகடமாக பேசி அனைவரையும் தன்பால் ஈர்க்கும் தன்மை உள்ளவன், தன்காரியம் நடக்க எதையும் செய்வார்கள், தனது சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து மகிழ்வார்கள். ரகசியமானவர்கள், சமாதன பிரியர்.

வியாழக்கிழமை பிறந்தவர்கள் :
சத்தியவான், தர்மவான், விவேகி, சந்தோஷவான், வழி நடத்துபவன். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள், சுற்றமிக்கவர்கள். சுற்றத்தற்கு தேவையனதை செய்ய தயங்காதவர்கள், பக்தி மிக்கவர்கள், பெரியோர்கள், முன்னோர்கள் சொன்னதை வேத வாக்காக எடுத்து நடப்பவர்கள்.

வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் :
செல்வந்தன், வசிகரம் மிக்கவன், மென்மையான செயல் செய்பவன், வழி நடத்துபவன். அழகாக பேசுபவர், முகஸ்துதிக்கு மயங்குபவர்கள், இவர்களை பாராட்டி எதையும் சாதிக்கலாம், இவர்களை விமர்சித்தால் இவர்களின் எதிர்ப்பு வந்து சேரும், கெஞ்சினால் மின்சுவார்கள், மிஞ்சினால் கென்சுவார்கள், செயல் திறன் மிக்கவர்கள்.

சனிக்கிழமை பிறந்தவர்கள் :
உழைப்பாளி, பலவீனன், விசுவாசி, வழி நடப்பவன். அவ்வளவு சீக்கிரம் பிறரிடம் பேசமாட்டார்கள், பிடித்தவர்களிடம் மட்டுமே பேசுவார்கள், தனக்கு பிடித்தவரிடத்தில் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பார்கள், பொறுமையானவர்கள், சகிப்பு தன்மையுள்ளவர்கள், தன்னை யார் ஏமாற்றினாலும், ஏளனம் செய்தாலும் கலங்காமல் முன்னேற்ற வழியில் தொடர்ந்து நடப்பவர்கள்.

(குறிப்பு: ஜோதிடம் தெரியாதவர்கள் விளையாட்டாக ஜோதிடம் தெரிந்துக்கொள்ள எழுதிய பொதுவான பலன் பதிவு ஆகும். ஒருசிலருக்கு பொருந்தும் ஒருசிலருக்கு பொருந்தாது)
7 நாட்களில் எந்த நாளில் பிறந்திருந்தாலும்
84000 (யோனி பேதங்களில்) உயிரினங்களில்
மனிதராக பிறக்க புண்ணியம் செய்தோம்
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார்
நாம் வாடிய நிலையில் வரும் மக்களை ஜோதிடம் என்ற டானிக் கொடுத்து
அவர்கள் முன்னேற மனித நேயத்துடம் வழிகாட்டுவோம்.
வெறும் கையுடன் என்ன செய்வது என்றால் அது மூடத்தனம்
அந்த கையில் கடவுள் 10 விரல் தத்திருக்கிறார் என்றால்
அது தான் நம் தன்னம்பிக்கையின் மூலதனம்
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக